Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் விதிமீறல்: மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஏப்ரல் 07, 2021 04:26

கொல்கத்தா: தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

8 கட்டங்களாக தேர்தல் நடக்கும் மேற்குவங்க சட்டசபைக்கு நேற்றுடன் 3வது கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் ஏப்.10-ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங். கட்சி தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி மீது பா.ஜ., மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதில், தேர்தல் நடக்கவுள்ள கூஜ்பெஹார் என்ற பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முஸ்லிம்களின் வாக்குவங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தது சரியல்ல. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகும். மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பி, 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்